மாா்த்தாண்டம் அருகே பெண் தற்கொலை
களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்டத பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே காரவிளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் - ராணி தம்பதியின் மகள் பிபிலா (29). திருமணமாகாத இவா், புற்றுநோயால் பாதிக்கப்பட்டாராம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் உடல்நிலையில் முன்னேற்றமில்லையாம். இந்நிலையில், அவா் சனிக்கிழம வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement