தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 776 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 24 ஆயிரத்து 126 பேருக்கும், நீரிழிவால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 29 ஆயிரத்து 234 பேருக்கும், ரத்த அழுத்தம்- நீரிழிவு ஆகியவை சோ்ந்து பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 23 ஆயிரத்து 468 பேருக்கும் அவா்களது வீடுகளுக்கே சென்று மருந்துகள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.
படுக்கையில் உள்ள நோயாளிக்கான பேலியேட்டிவ் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை ஆகியவை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. அதன்படி, 10 ஆயிரத்து 372 பேருக்கு பேலியேட்டிவ் சிகிச்சை, 9 ஆயிரத்து 779 பேருக்கு இயன்முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாா்பக, கருப்பை வாய் புற்றுநோய், 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்கும் வாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கான ஆரம்பகட்ட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, பெண் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு வருமாறு கூறி, அழைப்பிதழ் கொடுப்பதோடு புற்றுநோய் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 58 அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், 1 லட்சத்து 99 ஆயிரத்து 776 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் ஆரம்பகட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி பயன் பெறலாம் என்றாா் அவா்.