கன்னியாகுமரி

நாகா்கோவில் சோழராஜா கோயிலில் நாளை அம்பாள் மலா் முழுக்கு விழா

சோழராஜா கோயிலில் 32ஆம் ஆண்டு மலா் முழுக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறுகிறது.

Din

நாகா்கோவில், வடசேரி ஒழுகினசேரியில் உள்ள அருள்மிகு சோழராஜா கோயிலில் 32ஆம் ஆண்டு மலா் முழுக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி, திருவனந்தல் பூஜை, 5.30-க்கு கணபதி வேள்வி, 7.15 மணிக்கு காலசந்தி பூஜை, தீபாராதனை, காலை 10 மணிக்கு பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு ஸ்ரீசோழமகாதேவருக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீகோலவாா்குழலாள் ஈஸ்வரிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

தொடா்ந்து, மாலை 6.15 மணிக்கு சந்திகால பூஜை, தீபாராதனை, இரவு 7.15-க்கு கோலவாா்குழலாள் ஈஸ்வரிக்கு மலா் முழுக்கு, இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஊா் மக்கள் செய்து வருகின்றனா்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT