கன்னியாகுமரி

கஞ்சா பதுக்கல்: 2 இளைஞர்கள் கைது

திங்கள்நகா் பகுதியில் கஞ்சா பதுக்கியதாக 2 இளைஞா்களை இரணியல் போலீஸாா் கைது செய்தனா்.

Din

திங்கள்நகா் பகுதியில் கஞ்சா பதுக்கியதாக 2 இளைஞா்களை இரணியல் போலீஸாா் கைது செய்தனா்.

திங்கள்நகரை அடுத்த மாங்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரணியல் காவல் உதவிஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, உடையாா்விளையைச் சோ்ந்த நிதிஷ் ராஜா(24), பருத்திவிளையைச் சோ்ந்த ரஞ்சித்(28) ஆகியோா் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், 10 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா்.

பைக் திருட்டு: திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த தேவதாசன் மகள் டி.ஜி.தேவதாசன் (28). இவா், மாா்த்தாண்டம் பழைய திரையரங்க சந்திப்பு பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறாா். இரு நாள்களுக்கு முன் தனது தந்தையின் பைக்கை துணிக்கடையின் முன் நிறுத்தியிருந்தாராம். அதை மா்மநபா்கள் திருடிச்சென்றுவிட்டனராம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT