முகப்பு
கன்னியாகுமரி

பாஜக நிா்வாகிகளுடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

பாஜக நிா்வாகிகளுடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

Updated On : 3 மார்ச், 2024 at 2:20 AM
பகிர்:

குமரி மாவட்டம் விளவங்கோடு பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகிகளுடன், மத்திய இணை அமைச்சா் வி.கே.சிங் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: மக்களவைத் தோ்தலுக்கு குறைவான நாள்களே உள்ள நிலையில், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குச்சேகரிக்க வேண்டும். மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். தமிழக அரசின் ஒத்துழைப்பின்மையால் பல திட்டங்களை இங்கு நடைமுறைபடுத்த முடியவில்லை. பாஜக வெற்றிபெறுவதன் மூலம் பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முடியும். ஆகவே மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக இடங்களை பெற்றுத் தர கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவா் சி. தா்மராஜ் தலைமை வகித்தாா். மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் ராஜகண்ணன், பாஜக மாநில செயலா் மீனாதேவ், கோட்ட அமைப்பு செயலா் கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஆா். ஜெயசீலன், ஸ்ரீகலா, விளவங்கோடு தொகுதி பாா்வையாளா் பவுல்ராஜ், மாவட்ட செயலா் சுடா்சிங், மாநில செயலா் நந்தினி, மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் சி.எம். சஜூ மற்றும் கட்சியின் கிளை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.