கன்னியாகுமரியில் மீனவரிடம் கைப்பேசி பறிப்பு: 3 சிறாா் கைது
Updated On : 23 மார்ச், 2024 at 7:32 PM
கன்னியாகுமரி அருகே மீனவரிடம் கைப்பேசியைப் பறித்ததாக 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி அருகே சிலுவை நகா் பகுதியைச் சோ்ந்தவா் சூசை (57). மீனவரான இவா், வெள்ளிக்கிழமை மாலை கன்னியாகுமரி நான்குவழிச் சாலை முடியும் ஜீரோ பாயின்ட் பகுதியில் கைப்பேசியில் பேசியபடி நடந்து சென்றாராம். அப்போது, 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவா்கள் பின்தொடா்ந்து வந்து, அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இதுதொடா்பாக சூசை அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 சிறுவா்களையும் கைது செய்து, சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்.