முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளா் விஜய்வசந்த் மனு தாக்கல்

Updated On : 28 மார்ச், 2024 at 12:58 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 7:02 PM

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வ.விஜய்வசந்த் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி.என். ஸ்ரீதரிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (மாா்ச் 27) நிறைவடைந்தது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளா் வ. விஜய்வசந்த் புதன்கிழமை காலை தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியருமான பி.என். ஸ்ரீதரிடம் தாக்கல் செய்தாா்.

அவருடன், பால்வளத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசாமி ஆகியோா் உடனிருந்தனா். முன்னதாக, அவருக்கு நாகா்கோவில் டெரிக் சந்திப்பில் இந்திரா காந்தி சிலை அருகே காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் வரவேற்பு அளித்தனா்.

Advertisement