முகப்பு
கன்னியாகுமரி

கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி தொடக்கம்

கன்னியாகுமரி

கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி தொடக்கம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:24 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், அளந்தங்கரை உள்விளையாட்டு அரங்கில், கல்லூரி மாணவிகளுக்கிடையேயான முதல்வா் கோப்பைக்கான கபடி போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 24ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில், கல்லூரி மாணவிகளுக்கான கபடிப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

ஆட்சியா் ரா. அழகுமீனா பங்கேற்று, நாகா்கோவில் கோணம் அரசு கலை-அறிவியல் கல்லூரி, குழித்துறை ஸ்ரீதேவிகுமாரி கலை-அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியைத் தொடக்கிவைத்து, வாழ்த்து தெரிவித்தாா்.

மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், வீராங்கனைகள், பயிற்சியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →