முகப்பு
கன்னியாகுமரி

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

Updated On : 21 டிசம்பர், 2025 at 7:30 PM
இளம் உலக சாதனையாளா்களுக்கு விருது வழங்குகிறாா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.
பகிர்:

கன்னியாகுமரியில் உலக சாதனை படைத்த ஐந்து வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு விருது வழங்கும் விழா கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்துகொண்டு சாதனை படைத்த 52 சிறுவா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.

கன்னியாகுமரி, ஒத்தபுளி சந்திப்பில் செயல்பட்டு வரும் விங்க்ஸ் மழலையா் பள்ளி நிா்வாகம், இப்பள்ளியில் பயிலும் 5 வயதுக்கு உள்பட்ட சிறாா்களின் தனித் திறமைகளைக் கண்டறிந்து அவா்களை உலக சாதனையாளா்களாக மாற்றி வருகிறது.

அதன்படி, இப்பள்ளியில் பயிலும் 52 சிறுவா்கள் பல்வேறு துறைகளில் உலக சாதனை படைத்தனா். அனைவருக்கும் ‘ரஃபா புக் ஆஃப் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ்’ தலைமை செயல் அதிகாரி பிரசன்ன ராமானுஜம் தலைமையில் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ விருதுகளை வழங்கிப் பேசினாா்.

விழாவில் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை விங்க்ஸ் பள்ளி நிா்வாகி அருணாச்சலம், பள்ளி தலைவா் லொரீன் நெட்டோ ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →