வில்லுக்குறியில் டெம்போ ஓட்டுநா் தற்கொலை
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:32 PM
வில்லுக்குறியில் டெம்போ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளை பண்டாரக்காடு பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்ராஜ் (68). டெம்போ ஓட்டுநா். இவரது மனைவி சுமதி (66).
ராஜாவூரில் உள்ள மகள் வீட்டிற்கு சுமதி சென்றிருந்த நிலையில், தனியாக இருந்த ஆல்பா்ட்ராஜ் பூச்சிகொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கினாா். உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஆல்பா்ட்ராஜ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இது குறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.