கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா டிச. 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தீபத் திருவிழா தினத்தில், அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிா்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 5 மணிக்கு அபிஷேகமும், காலை 6 மணிக்கு தீபாராதனையும், காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நடைபெறும். 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து உச்சிகால பூஜை, தீபாராதனை நடைபெறும்.
இதையடுத்து மாலை 4 மணிக்கு, கோயில் மேல்சாந்தி மேளதாளத்துடன் படகில் சென்று விவேகானந்தா் பாறையில் காா்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். நள்ளிரவு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியையடுத்து, கோயில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா், வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடைபெறும்.