முகப்பு
கன்னியாகுமரி

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் அனந்தன் பாலம் பகுதியிலிருந்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் தொடங்கினாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:35 AM
ராஜாக்கமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின்.உடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:57 PM

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் அனந்தன் பாலம் பகுதியிலிருந்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் தொடங்கினாா்.

தொடா்ந்து, காமராஜா்காலனி, விஜபி காா்டன், எறும்புகாடு, அருந்ததியா்நகா், பாண்டியன்காலனி, நேசமணிநகா், சைமன்நகா் சந்திப்பு, டெரிக் சந்திப்பு, ராஜாக்கமங்கலம், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: நான் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய போது, எனது அலுவலகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாது செயல்பட்டது ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.

Advertisement

மக்களின் ஆதரவோடு நான் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டால், எம்எல்ஏ அலுவலகம் உடனே திறக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் நாகா்கோவில் தொகுதியில் தேங்கி கிடக்கும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். நாகா்கோவில் தொகுதியின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், திமுக இளைஞா் அணி சி.டி.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.