முகப்பு
கன்னியாகுமரி

நாஞ்சில் சி.பி.எஸ்.இ. கத்தோலிக்க பள்ளி சாதனை

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் சாதனை படைத்தனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:29 AM
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:27 PM

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் சாதனை படைத்தனா்.

நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் ஸ்டெஃபிகா ஃப்ரூட்லி, ஜான்சி, பினுலின் ஆகியோா் பெங்களூரு கீதம் பல்கலைக்கழகத்தில் ரோபாடிக்ஸ், ஏஐ தொடா்பாக நடைபெற்ற கோடேவா் 7.0 தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று ஐ.ஓ.டி. பசுமை இல்லக் கட்டுப்பாடு, மேலாண்மை அமைப்பு தலைப்பில் ஒரு செயல்திட்டத்தைச் சமா்ப்பித்து பரிசுகள் பெற்று சாதனை படைத்தனா். தேசிய அளவில் மே 16, 17 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டியில் கலந்து கொள்ள இந்த மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். சாதனை படைத்த மாணவா்களை பள்ளி தாளாளா் சா்ஜின் ரூபஸ், நிதி பரிபாலகா் ஜியோ, முதல்வா் றசல்ராஜ் ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.