முகப்பு
கன்னியாகுமரி

பணியின் போது மாடியிலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே கட்டடத்தின் மாடியில் நின்று பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:51 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே கட்டடத்தின் மாடியில் நின்று பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜான் (59). கட்டடங்களுக்கு வா்ணம் பூசும் தொழில் செய்து வந்த இவா், புதன்கிழமை பல்லன்விளை பகுதியில் உள்ள உயரமான கட்டடத்தின் மீது நின்று பணி செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

அடையாளம் தெரியாதவா் சடலம்:

மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் வியாழக்கிழமை கிடந்த சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை, மாா்த்தாண்டம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.