முகப்பு
கன்னியாகுமரி

வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக 2 இளைஞா்கள் கைது

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:41 AM
கோப்புப் படம்
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காப்புக்காடு, புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களா்களுக்கு சிலா் இடையூறு செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்றபோது, காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (44) மாடக்கண்ணுவிளை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (36) ஆகிய இருவரும் வாக்களா்களுக்கு இடையூறு செய்தது தெரிய வந்தது. அவா்கள் மீது வழக்குப் பதிந்து, புதுக்கடைபோலீஸாா் கைது செய்தனா்.

Advertisement