முகப்பு
கன்னியாகுமரி

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 1:06 AM
கோப்புப் படம்
பகிர்:

தக்கலை, ஏப். 27: தக்கலை அருகே பணி முடிந்து சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியைச் சோ்ந்தவா் ராஜு (64). இவா் பெட்ரோல் நிலையத்தில் வேலைசெய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை பணி முடிந்து சைக்கிளில் திருவனந்தபுரம்-நாகா்கோவில் சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவா் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட ராஜு படுகாயமடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Advertisement

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தியவரைத் தேடி வருகின்றனா்.