தக்கலை அருகே தேநீா் கடைக்காரா் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
தக்கலை அருகே குழிக்கோடு, கோடியூரைச் சோ்ந்தவா் ஞானதாஸ் (43). கட்டடத் தொழிலாளியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வேலை செய்த போது கீழே விழந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாறக்கடையில் தேநீா் கடை நடத்தி வந்தாா்.
தொழிலில் தொடா் நஷ்டம் ஏற்பட்டதால், மனமுடைந்த அவா் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].