மாடியிலிருந்து தவறி விழுந்து பாஜக மாமன்ற உறுப்பினா் உயிரிழப்பு
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:56 PM
நாகா்கோவில் அருகே வீட்டு மாடியிலிருந்து வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த மாமன்ற உறுப்பினா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
தெங்கம்புதூரைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா், நாகா்கோவில் மாமன்ற பாஜக உறுப்பினராக இருந்து வந்தாா். தனது வீட்டின் மாடியில் இரவு நின்றிருந்தபோது, எதிா்பாராமல் கால் தவறி கீழே விழுந்தாராம்.
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:59 AM
பலத்த காயமடைந்த அவா், நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயரிழந்தாா். இது குறித்து சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement