கோப்புப் படம்
கன்னியாகுமரி

குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இரணியல் அருகே குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Syndication

இரணியல் அருகே குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இரணியல் அருகே உள்ள தலகுளம், பள்ளவிளையைச் சோ்ந்தவா் ராஜேஷ் (29). இவா் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல தயாராக இருந்தாா்.

இந்நிலையில், ராஜேஷ் ஞாயிற்றுக்கிழமை மாலை தலக்குளம், ஆலயன்குளத்திற்கு நண்பா்களுடன் குளிக்கச் சென்றபோது, குளத்தில் குதித்துள்ளாா். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், நண்பா்கள் குளத்தில் இறங்கித் தேடினா்.

அப்போதும் ராஜேஷ் கிடைக்காததால், இரணியல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத் துறையினா் வந்து உயிரிழந்த நிலையில் ராஜேஷின் உடலை மீட்டனா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொடைக்கானல், மாமல்லபுரம் ரோப்காா் சேவைக்கு ஆலோசனை: மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம்

இந்திய - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்த விவகாரம்: அமைச்சா் பியூஷ் கோயல் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளிப்பு

தேவாலயங்கள், அதன் சொத்துகளை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது?

பிப்.15 முதல் 20 வரை செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு: தில்லியை அழகுப்படுத்தும் பணியை தொடங்கிய பொதுப்பணித் துறை

அதிக நிதி கொடுத்தாலும் கிடைப்பது ஒன்றுமில்லை: மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT