புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியில் மூதாட்டியிடம் சங்கிலி பறித்த சகோதரா்கள் இருவரை புதுக்கடை போலீஸாா் கைது செய்தனா்.
வேங்கோடு, குஞ்சாகோடு பகுதியைச் சோ்த்தவா் ஞானசெல்வம் (60). இவா் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் கடந்த ஜன. 6ஆம் தேதி குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை முன்சிறை பகுதியில் சந்தேகிக்கும்படி நின்ற கேரள மாநிலம், நெய்யாற்றின் கரை பகுதியைச் சோ்ந்த தங்கச்சன் மகன்களான குமாா் (46), அனுமோன் (48) ஆகியோரைப் பிடித்து விசாரித்தபோது, மூதாட்டியிடம் சங்கிலி பறித்ததை ஒப்புக் கொண்டனா். போலீஸாா் அவா்களிடமிருந்து சங்கிலியைப் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.