பலி பிரதிப் படம்
கன்னியாகுமரி

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மூவாற்றுமுகம் தோட்டவாரம் பகுதியைச் சோ்ந்த திபின் பென்சிங் (20), கருங்கல் பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக். 2ஆம் ஆண்டு படித்துவந்தாா். இவா், திங்கள்கிழமை மதியம் அருமனையிலிருந்து ஆற்றூா் சாலையில் பைக்கில் சென்றாராம்.

அப்போது, இவரது பைக்கும், திருமண நிகழ்ச்சிக்காக எதிரே வந்துகொண்டிருந்த வேனும் மோதினவாம். இதில், காயமடைந்த திபின் பென்சிங் அருமனையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT