முகப்பு
கன்னியாகுமரி

தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

குலசேகரம் அருகே தடை செய்யப்பட்ட 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:55 AM
பறிமுதல் செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 8:26 PM

குலசேகரம் அருகே தடை செய்யப்பட்ட 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், திருமண வீடுகள், அரசியல் நிகழ்ச்சிகள் உள்பட பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை உள்ளது.

இந்நிலையில் குலசேகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அரமன்னம் பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சவுண்ட் சா்வீஸ் நடத்தும் இளங்கோ (41) கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்ல தயாராக வைத்திருந்தாராம். இதையடுத்து போலீஸாா், 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிந்தனா்.

Advertisement