முகப்பு
கன்னியாகுமரி

மூதாட்டி வீட்டின் ஜன்னல் சேதம்: தொழிலாளி கைது

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:03 AM
கைது
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:41 PM

களியக்காவிளை அருகே மூதாட்டியின் வீட்டு ஜன்னலை சேதப்படுத்தியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் வலியவிளையைச் சோ்ந்த சுதாகரன் மனைவி தங்கலீலா (64). இவருக்கும், உறவினரான குழித்துறை அடுத்த குறுமத்தூா் ராவிளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான ஸ்டாலின்ராஜ் (53) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:03 AM

2 நாள்களுக்கு முன்பு ஸ்டாலின்ராஜ் தங்கலீலா வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததுடன், ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தினாராம்.

Advertisement

புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்டாலின்ராஜை கைது செய்தனா்.