முகப்பு
கன்னியாகுமரி

சுங்கான்கடையில் 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக் கடன் வழங்கல்

நாகா்கோவில் சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:35 PM
மாணவிக்கு கல்விக் கடனுக்கான காசோலையை வழங்குகிறாா் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா.
பகிர்:

நாகா்கோவில் சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மாவட்ட முன்னோடி வங்கி, இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சாா்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம், வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக்கடன் ஆணைகளை வழங்கினாா்.

இதில் கல்லூரி முதல்வா் ஜே. ஏ. அலெக்ஸ்ராஜு பாலன், துணை முதல்வா் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் ரந்தீா் மகேஷ் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments