கன்னியாகுமரி

கேரளத்திற்கு கடத்த முயன்ற மண்ணெண்ணெய் பறிமுதல்

கருங்கல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியில் கேரளத்திற்கு கடத்த முயன்ற ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய்யை வாகனத்துடன் வருவாய்த் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியில் கேரளத்திற்கு கடத்த முயன்ற ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய்யை வாகனத்துடன் வருவாய்த் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதா தலைமையில் தனி வருவாய் ஆய்வாளா் ஜோதிஸ்குமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை அதிகாலை நட்டாலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாகச் சென்ற சொகுசு வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்ாம். அந்த வாகனத்தை துரத்திச் சென்று கல்லுக்கூட்டம் பகுதியில் பிடித்தனராம். ஓட்டுநா் தப்பி சென்றுவிட்டாராம். வாகனத்தை சோதனை செய்ததில், கேரளத்திற்கு கடத்துவதற்காக ஆயிரம் லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் மண்ணெண்ணெய்யை வாகனத்துடன் பறிமுதல் செய்து விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா்.

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

SCROLL FOR NEXT