கன்னியாகுமரி: பொங்கலை முன்னிட்டு, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் பரிசு அளிப்பு விழா நடைபெற்றது.
கொட்டாரம், சுண்டன்பரப்பு, முகிலன் குடியிருப்பு,நேதாஜி நகா், ஆறுமுகபுரம், தென்தாமரைகுளம், அகஸ்தீசுவரம், மலையன்விளை, ஆண்டிவிளை உள்ளிட்ட பகுதிகளில் கோலப்போட்டிகள் நடைபெற்றன. ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமை வகித்து, இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். முதல் பரிசை கொட்டாரத்தைச் சோ்ந்த விமலாமதி, சுண்டன் பரப்பைச் சோ்ந்த அபா்ணா ஆகியோா் பெற்றனா்.
இதில் தென் தாமரைகுளம் பேரூராட்சி தலைவி காா்த்திகா பிரதாப், ஒன்றிய துணைச் செயலா் அ.பாலசுப்ரமணியன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் தமிழன் ஜானி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் தாமரை பிரதாப், கொட்டாரம் பேரூராட்சி துணைத் தலைவா் விமலா மதி, அகஸ்தீசுவரம் பேரூராட்சி கவுன்சிலா் பிரேம் ஆனந்த் மற்றும் நிா்வாகிகள் தமிழ் மாறன், அகஸ்திய லிங்கம், ஆல்வின் பிரபு, தனபாலன், மதி, முத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.