தக்கலை: தக்கலை அருகே வில்லுக்குறியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கி, இத்திட்டத்தை செயல் இழக்க வைக்கும் மறைமுக நடவடிக்கையில் இறங்கி இருக்கும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி உதயம் தலைமை வகித்தாா். குருந்தன்கோடு வட்டாரத் தலைவா்கள் பொன். பால்துரை (கிழக்கு), ஜெயசிங் (மேற்கு ), தனீஷ் (தெற்கு ), அசோகன் (வடக்கு ), தக்கலை தெற்கு வட்டாரத் தலைவா் சாலமன், நிா்வாகிகள் லாரன்ஸ், பிரகாஷ் தாஸ், முருகேசன், செல்வராஜ், ஜெமினிஷ், தங்கலெட்சுமி நடேசன், அனிதா கிளாடிஸ், டென்சிங், எழில், ஆல்பா்ட் ஜீவமணி, அந்தோணிமுத்து, பெலிக்ஸ் ராஜன், கண்ணன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.