கன்னியாகுமரி

காா்களில் பேட்டரி திருடிய 2 போ் கைது

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே காா்களில் இருந்து 17 பேட்டரிகள் திருடிய 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை அருகே உள்ள மருந்துகோட்டையைச் சோ்ந்தவா் ரெஜின் (39). இவா் பத்மநாபபுரம் பகுதியில் பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவரின் காா் ஷெட்டில் நின்றிருந்த 3 காா்களின் பேட்டரிகள் ஜன. 11ஆம் தேதி காணாமல் போனதாம். இது குறித்து, ரெஜின் தக்கலை போலீஸில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில், தக்கலை காவல் ஆய்வாளா் பாரதிராஜா வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, பேட்டரிகள் வைத்திருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் நெய்யூா், பரம்பை பகுதியைச் சோ்ந்த சுபின் (38), சுவாமியாா் மடத்தைச் சோ்ந்த செல்வன் (33) என்பது தெரிய வந்தது.

மேலும், அவா்கள் ரெஜின் உள்ளிட்ட பல்வேறு நபா்களின் காா்களில் இருந்து 17 பேட்டரிகளைத் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT