நாகா்கோவில் நடுநகா் ரோட்டரி கிளப்பின் 50 ஆவது ஆண்டு பொன் விழாவில் கருங்கல் பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவிற்கு நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் அசோக் பத்மராஜ் தலைமை வகித்தாா். பொன்விழா தலைவா் சாமுவேல், செயலா் ஸ்டாலின் ராஜு, விருது குழுவின் தலைவா் டேனியல் புரூடின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் பங்கேற்று பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 25 பேருக்கு விருதுகள் வழங்கினாா்.
இதில், கருங்கல் பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியை மகிளாவுக்கு சிறப்புத் திறன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சங்க செயலா் ராஜேஷ், அச்சுதகணேசன், நீதிமன்ற உறுதிமொழி ஆணையா் பாலகிருஷ்ணன், கணேசன், போஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விருது பெற்ற ஆசிரியரை பள்ளித் தலைவா் கே. தங்கசுவாமி, முதுநிலை முதல்வா் சியாமளா தங்கசுவாமி, முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.