கன்னியாகுமரி பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டாா் வாகன விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது மாவட்ட கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.
இதன் தொடா்ச்சியாக, மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் தலைமையிலான போக்குவரத்து போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதில் நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட கனரக வாகனங்கள், நேரக்கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.