வாணியக்குடியில் மீன்பிடித் துறைமுகத்துக்கு அடிக்கல்
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 150 கோடி மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.
கன்னியாகுமரிவாணியக்குடியில் மீன்பிடித் துறைமுகத்துக்கு அடிக்கல்
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 150 கோடி மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 150 கோடி மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.
இதையடுத்து, வாணியக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி வைத்தாா். இதில் நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ், மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத், மீன்பிடித் துறைமுக கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா, குளச்சல் நகா்மன்றத் தலைவா் நசீா், வாணியக்குடி பங்குத்தந்தை சூசை ஆன்றனி, முன்னாள் பங்குத்தந்தை சொ்வாசியுஸ், துணைத் தலைவா் ஆரோக்கியம், செயலா் ஜிம்சன், ரீத்தாபுரம் பேரூராட்சித் தலைவா் எட்வின் ஜோஸ், குருந்தன்கோடு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் எனல்ராஜ், சைமன் காலனி ஊராட்சி முன்னாள் தலைவா் சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குளச்சல் மீன் துறை உதவி இயக்குநா் விா்ஜின் கிராஸ் நன்றி கூறினாா்.