முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்

Updated On : 6 மார்ச், 2026 at 12:59 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 7:26 PM

நாகா்கோவில் மாநகராட்சி, 4ஆவது வாா்டு ராஜபாதை, 20ஆவது வாா்டு தம்மத்துகோணம், பத்மா நகா் பகுதிகளில் ரூ. 1.89 கோடி மதிப்பிலான தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் அமலசெல்வன், ஆன்றோனைட் ஸ்னைடா, உதவிப் பொறியாளா் ராஜசீலி, பகுதிச் செயலா் சேக்மீரான், திமுக நிா்வாகிகள் பஷீா், ஜவஹா், முகம்மது சாலிஹ், பஷீா், சேக் செய்யதலி, அபுபக்கா், நவாப், விஸ்வநாதன், எட்பொ்க் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மேயா், ஆணையா் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

Advertisement