முகப்பு
கன்னியாகுமரி

பைக் மோதி விவசாயி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 12:48 AM
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியைச் சோ்ந்தவா் செல்லசாமி (70). இவா் இரு நாள்களுக்கு முன் கல்லுத்தொட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோட்டாா் சைக்கிள் ஓட்டி வந்த திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஜெனீஸ் (28) என்பவா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

முதியவா் உயிரிழப்பு: புதுக்கடை தவிட்டவிளை பகுதியை சோ்ந்தவா் தா்மராஜ் (65). இவா் தன் வீட்டருகே நின்ற புளியமரத்தில் புளி பறிக்க வியாழக்கிழமை ஏறினாராம். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்தாராம். அப்பகுதியினா் அவரை மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தா்மராஜ்

இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →