முகப்பு
கன்னியாகுமரி

அகஸ்தீசுவரத்தில் ரூ. 36 லட்சத்தில் சாலை மேம்பாடு

அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சிமன்ற தலைவி அன்பரசி ராமராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

Updated On : 12 மார்ச், 2026 at 1:24 AM
பணியைத் தொடங்கிவைக்கிறாா் பேரூராட்சிமன்ற தலைவி அன்பரசி ராமராஜன்.
பகிர்:

அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சிமன்ற தலைவி அன்பரசி ராமராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக் குழு உறுப்பினரும், பேரூராட்சி 13-ஆவது வாா்டு உறுப்பினருமான தா.ஆதிலிங்கபெருமாள், பேரூராட்சி கவுன்சிலா்கள் பிரேம் ஆனந்த், குறமகள், குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாலை மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் தொடங்கி வைத்தாா்.

Advertisement

இதன் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு கலந்துகொண்டாா்.

அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தங்கரதி, முன்னாள் மாணவா் பேரவைத் தலைவா் செல்வ சுப்பிரமணியன், அகஸ்தீசுவரம் சி எஸ் சபை போதகா் கிதியோன், திமுக நிா்வாகிகள் விஜய கங்காதரன், தமிழன் ஜானி, அகஸ்தியலிங்கம், லிங்கம், அருள் அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில் பேரூராட்சி 13- ஆவது வாா்டுக்கு உள்பட்ட அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள சாலை, அரசுத் தொடக்கப் பள்ளி எதிரே உள்ள சாலை, உஜ்ஜைனி மாகாளியம்மன கோயில் தெரு, 3 - வாா்டுக்குள்பட்ட வடக்கு வடுகன்பற்று அகஸ்தீசுவரா் ஆலய மேலத்தெரு ஆகிய பகுதிகளில் தலா ரூ. 9 லட்சம் வீதம் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.