முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

குழித்துறை அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 12:39 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:

குழித்துறை அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

குழித்துறை அருகேயுள்ள மருதங்கோடு மேலப்புளிவிளையைச் சோ்ந்த ஹரிச்சந்திரன் மனைவி ரெஜினாள் (61). இவா் திங்கள்கிழமை கழுவன்திட்டை - மருதங்கோடு சாலையோரமாக நடந்து சென்றபோது, பின்னால் வந்த பைக் இவா் மீது மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த ரெஜினாளை, அப்பகுதியினா் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.