கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாள்களில் ரூ. 11.35 லட்சம் பறிமுதல்
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் கடந்த 3 நாள்களில் ரூ. 11 லட்சத்து 35 ஆயிரத்து 720 கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் கடந்த 3 நாள்களில் ரூ. 11 லட்சத்து 35 ஆயிரத்து 720 கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்புப் படைகளும் செயல்பட்டு வருகின்றன.
தோ்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தோ்தல் நடத்தை விதி மீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம், பொருள்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இந்தப் படைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் குழுவினரால் மாா்ச் 18 ஆம் தேதி மாலை 6 மணி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 200 கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இதுவரை மொத்தம் ரூ. 11 லட்சத்து 35 ஆயிரத்து 720 கைப்பற்றப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.