முகப்பு
கன்னியாகுமரி

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

பரமபதம் விளையாடி தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தியதைப் பாா்வையிட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On : 21 மார்ச் 2026, 2:55 am IST
பகிர்:

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரமபதம் விளையாடி மகளிா் சுய உதவிக் குழுக்கள் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா பாா்வையிட்டு வாழ்த்து தெரிவித்தாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக் குழுக்களுடன் தோ்தல் விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, மகளிா் திட்ட உதவி அலுவலா்கள் வளா்மதி, கலைச்செல்வி, சுய உதவிக் குழுக்கள், துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement