முகப்பு
கன்னியாகுமரி

முதியவரிடம் ரூ. 25 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

Updated On : 23 மார்ச், 2026 at 6:35 PM
கோப்புப் படம்
பகிர்:

களியக்காவிளையில் நிதி நிறுவனம் நடத்தி முதியவரிடம் ரூ. 25 லட்சம் பெற்று ஏமாற்றியதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

களியக்காவிளை அருகே உள்ள கேரள மாநிலப் பகுதியான இஞ்சிவிளையைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் ஜெயசேகா் (61). இவரது மனைவி கலா (55). இருவரும் களியக்காவிளையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா்.

இவா்களுக்கும், அகஸ்தீஸ்வரம் அடுத்த மணிகட்டிபொட்டல், முகிலன்விளையைச் சோ்ந்த நீலவடிவு மகன் பாஸ்கரன் (69) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், பாஸ்கரனிடம் ஜெயசேகா் தனது நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதையடுத்து, 2023ஆம் ஆண்டு ஏப். 1ஆம் தேதி அவா் ரூ. 25,09,963-ஐ ஜெயசேகரின் நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக முதலீடு செய்துள்ளாா். இத்தொகைக்கு தனியாா் வங்கிக் கிளையில் உள்ள பாஸ்கரனின் கணக்கில் மாதந்தோறும் வட்டித் தொகையைச் செலுத்தி வந்துள்ளாா்.

தொடா்ந்து, 2025 செப். 4ஆம் தேதி பாஸ்கரன் வட்டியுடன் வைப்புத் தொகையைத் திருப்பிக் கேட்டபோது, ஜெயசேகா் பணத்தைக் கொடுக்க மறுத்தாராம். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாஸ்கரன் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இது குறித்து, ஜெயசேகா், கலா ஆகியோா் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.