புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் காா் மோதிய விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா்.
பைங்குளம் முக்காடு பகுதியைச சோ்ந்த பரமேஸ்வரன் நாடாா் மனைவி பால்மணி (57). இவா் திங்கள்கிழமை பைங்குளம் பகுதியில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த காா் திடீரென பால்மணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.