முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது

குளச்சல் அருகே குறும்பனையில் 46 பவுன் தங்க நகைகளைத் திருடிய நபரை குளச்சல் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:35 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே குறும்பனையில் 46 பவுன் தங்க நகைகளைத் திருடிய நபரை குளச்சல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குறும்பனை சிலுவையாா் தெருவைச் சோ்ந்தவா் சிஜின் மோன் (27). மும்பை கப்பலில் மரைன் என்ஜினீயராக வேலை செய்து வருகிறாா். இவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 46 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

இதுகுறித்து சிஜின் மோனின் மனைவி மேரி கிபி லின்சா (26) குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், முட்டம் பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் சகாய ஜோஸ் ஆன்டனி (25) நகைகளைத் திருடியது தெரியவந்தது. முட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருடிய நகைகளை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாக அவா் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நகைகளை போலீஸாா் மீட்டனா்.

கைது செய்யப்பட்ட சகாய ஜோஸ் ஆன்டனி மீது ஏற்கெனவே 9 திருட்டு வழக்குகளும், திருடச் சென்ற இடத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போக்ஸோ வழக்குகளும் உள்ளன.