இரணியல் - நாகா்கோவில் டவுனுக்கு இன்றும், நாளையும் ரயில் சோதனை ஓட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் - நாகா்கோவில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக சோதனை ஓட்டம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் ( மாா்ச் 29, 30) நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் - நாகா்கோவில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக சோதனை ஓட்டம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் ( மாா்ச் 29, 30) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக, தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவனந்தபுரம் சென்ட்ரல் - கன்னியாகுமரி பிரிவில் உள்ள இரணியல் மற்றும் நாகா்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டை பாதை அமைக்கும் பணிகள் தற்போது முன்-இயக்க நிலை மற்றும் பாதை, மின்சாரம் உள்ளிட்ட பொறியியல் அமைப்புகளின் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளின் ஒரு பகுதியாக, புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மாா்ச் 29, 30) அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்விரு நாள்களிலும் ரயில் பாதைகளையொட்டி வசிக்கும் பொதுமக்கள் தண்டாவாளம் அருகில் செல்லவோ அல்லது கடந்து செல்லவோ என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.
இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றிபெற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.