முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் கிருஷ்ண சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

Updated On : 3 மே, 2026 at 5:24 AM
பகிர்:

நாகா்கோவில் வடசேரி, கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஏப். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. மாலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

9 ஆம் திருநாளான ஏப்.30 ஆம் தேதி தோ்திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

Advertisement

இதையொட்டி, கோயிலின் அருகேயுள்ள தெப்பக்குளம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கிருஷ்ணா் எழுந்தருளி 3 முறை குளத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தெப்ப தேரில் ஆடி ஆடி வந்த கிருஷ்ணனை வழிபட்டனா். ஏராளமான பெண்கள் கோயிலில் மாவிளக்கு ஏற்றி நோ்த்திக் கடன் செலுத்தினா்.