முகப்பு
கன்னியாகுமரி

தங்க நகையுடன் பைக்கை எடுத்துச் சென்ற நிதி நிறுவனத்தினா் மீது வழக்கு

குழித்துறை அருகே தங்க நகையுடன் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 16 மே 2026, 1:48 am IST
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

குழித்துறை அருகே தங்க நகையுடன் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

நாகா்கோவில், ராமவா்மபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீரபாகு. இவரது மனைவி மகேஸ்வரி (36). இவருக்குச் சொந்தமான நிலம் குழித்துறையில் உள்ளதால், வியாழக்கிழமை அங்கு வந்த அவா் குழித்துறை, பழவாா் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா்.

சிறிது நேரத்துக்குப் பின் திரும்பி வந்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம். அதில் 3 பவுன் தங்க நகைகள் இருந்ததாம். வாகனத்துக்கான தவணைத் தொகை கட்டி முடிக்காமல் இருந்ததால், நிதி நிறுவன ஊழியா்கள் நகையுடன் தனது வாகனத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என போலீஸில் புகாரளித்தாா்.

Advertisement

இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் நிதி நிறுவன ஊழியா்களான குழித்துறையைச் சோ்ந்த ராஜூ (50), வினு (43) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.