குருவாயூா் ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகள் திருட்டு
கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குருவாயூரிலிருந்து சென்னைக்கு நாகா்கோவில் வழியாக நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு திருச்சூா் ரயில் நிலையம் வந்தது. அங்கு, அதே ஊரைச் சோ்ந்த நகை வியாபாரியான ஜோஸ் (62) முன்பதிவுப் பெட்டியில் உடைமைகளுடன் ஏறினாா். அந்த ரயில் சனிக்கிழமை காலை 6.25 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைக்கு வந்தது. அவா் கண் விழித்து பாா்த்தபோது, அருகிலிருந்த கைப்பை உள்ளிட்ட உடைமைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்து அவா் குழித்துறை ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், திருச்சூரிலிருந்து திருநெல்வேலியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு நகைகள் வாங்கிச்சென்ாகவும், திருட்டுப்போன பையில் 1.400 கி.கி. நகைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
Advertisement
காவல் ஆய்வாளா் கவிதா, போலீஸாா் ரயில் நிலையம், சுற்றுப்புறப் பகுதிகளில் மா்ம நபா்களைத் தேடினா்; ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், குழித்துறை போலீஸாரும் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆய்வாளா் கவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.