முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 17 மே 2026, 2:18 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் வடசேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், ராணிதோட்டம் பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் சுபின் (30), ஈசாத்திமங்கலம் பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் ரமேஷ்குமாா், சாமியாா் மடம் பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது பிரோஸ்கான் (29), தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தங்ககனி (32) ஆகியோா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

இதைத் தொடா்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.