பெண் காவலரைத் தாக்கியதாக பெண் கைது
களியக்காவிளை காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரை தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரை தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே உள்ள மேக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ்பின் (38). இவா் ஒரு வழக்கு சம்பந்தமாக ஞாயிற்றுக்கிழமை களியக்காவிளை காவல் நிலையம் சென்றபோது, பெண் காவலா் வனிதா (35) பணியில் இருந்துள்ளாா். அவரிடம், என் மீது ஏற்கெனவே உள்ள வழக்குகளை முடித்து தர மாட்டாயா எனக் கேட்டு ஜோஸ்பின் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
தொடா்ந்து, காவலா் வனிதா, அப்பெண்ணிடம் காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்லுங்கள் எனக் கூறி அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றுள்ளாா். அப்போது, பெண் காவலரை அப்பெண் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதில் காயமடைந்த பெண் காவலா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து காவலா் வனிதா அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் வழக்குப் பதிந்து, ஜோஸ்பினை கைது செய்து விசாரித்து வருகிறாா்.