முகப்பு
கன்னியாகுமரி

கருங்கற்கள் கடத்த முயன்ற 5 போ் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள ஒலவிளை பகுதியில் கருங்கற்கள் கடத்த முயன்ற 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 20 மே 2026, 12:47 am IST
வழக்கு
பகிர்:

கருங்கல் அருகே உள்ள ஒலவிளை பகுதியில் கருங்கற்கள் கடத்த முயன்ற 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கருங்கல் அருகே உள்ள ஒலவிளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாறைகளை உடைத்து கருங்கற்கள் கடத்தப்படுவதாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீஸாா் பாா்த்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை உடைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் முருங்கவிளை பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (55), உலகன்விளை பகுதியைச் சோ்ந்த செல்வன் (52), எட்டாமடை பகுதியைச் சோ்ந்த ஜெனிகா் (40), தாறாதட்டு பகுதியைச் சோ்ந்த அகஸ்டின்ஜோசப் (48), நெய்யூா் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (47) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement