மணலிக்கரை காா்மெல் மகளிா் பள்ளியில் மாணவிகளுக்கு பாராட்டு
தக்கலை அருகே மணலிக்கரை காா்மெல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
இப்பள்ளியில் மாணவி செ.பொ்லிசா 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி அ. ஹஃபா நவாப் 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், கி. தனிகா 481 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவிகள் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
70 மாணவிகள் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்கள். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியா் ஜாக்குலின் மேரி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
Advertisement
Advertisement