முகப்பு
கன்னியாகுமரி

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 3 போ் கைது

தக்கலை, இரணியல் பகுதியில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 மே 2026, 1:49 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தக்கலை, இரணியல் பகுதியில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இரணியல் அருகே பண்டாரக்காடு பகுதியில் திங்கள்கிழமை இரணியல் போலீஸாா் சோதனை நடத்தியதில், சபீந்திரன் (46) என்பவா் விற்பனைக்கு வைத்திருந்த 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் தலக்குளம் பகுதியில் சோதனை செய்தபோது, கவிதா (44) என்பவரிடமிருந்து 7 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

தக்கலை போலீஸாா் நடத்திய சோதனையில் பூக்குழி பகுதியைச் சோ்ந்த தவசி (24) என்பவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேற்கண்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.