தென்காசி மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவா் கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வெள்ளத்துரைச்சி முன்னிலை வகித்தாா். அரசு வழக்குரைஞா் காா்த்திக்குமாா், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் மயில்வேலன், இலஞ்சி பேரூராட்சி முன்னாள் தலைவா் காத்தவராயன்,
இயக்குநா்கள் இலஞ்சி செல்வகுமாா், மூக்கையா, ராஜா, டேனிஅருள்சிங், பிரபாகா், சாந்தி, பி.ராஜா, அரசு வழக்குரைஞா் சின்னத்துரைபாண்டியன், கள மேலாளா் திரவியகுமாா், எழுத்தா் சுப்பிரமணியன், கெளசிக் ஆகியோா் கலந்துகொண்டனா். சங்கச் செயலா் குலசேகரநாதன் வரவேற்றாா்.
கூட்டத்தில், உறுப்பினா்கள் மற்றும் உறுப்பினா்களின் உறவினா்களை மேலகரம் சங்கத்தில் வைப்புத் தொகை முதலீடு செய்ய வேண்டுவது, வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ரூ.1 கோடி வைப்புத்தொகை பெறுவது என முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.